கல்வியும் கல்லாமையும்
கவிராஜர் ஜெகவீர பாண்டியனார் ஒரு பெரும் புலவர். கட்டபொம்மன் மரபிலே வந்தவர். மிகவும் சிறந்து விளங்கிய தமிழ்ப் பெருங்கவிஞர். ஒருநாள் மதுரையிலே நான் அவருடன் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், சிற்றூரிலிருந்து அவரைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார். அவரைக் கண்டதும் ஜெகவீர பாண்டியர் என்னோடு பேசுவதை நிறுத்திவிட்டு, ‘வாருங்கள், அமருங்கள், என்ன செய்தி?’ -என்று கேட்டார். அதற்கு அவர், ‘ஒன்றுமில்லை, தங்களைப் பார்க்க வந்தேன்!’ என்றார். ‘பார்த்தாயிற்றே; பின் என்ன செய்தி’ என்று மறுபடியும் கேட்டார். வந்தவர் அதற்கும்,…
கிறு, கின்று – பெருமாள் முருகன்
இலக்கிய விமர்சனக் கட்டுரை ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். எழுதியவர் நன்கு அறிமுகமான எழுத்தாளர்தான். ‘சில கதைகள் பழைய இலக்கியச் செய்திகளை நினைவுபடுத்துகிறவை’ என்று ஒரு தொடர். ‘நினைவுபடுத்துகின்றவை’ என்றல்லவா வர வேண்டும்? சரி, அச்சுப்பிழையாக இருக்கக் கூடும் எனக் கருதி மேலே படித்தேன். இன்னோரிடத்தில் ‘ஒருவருக்கு ஈர்ப்பூட்டுகிறவை எல்லோரையும் ஈர்க்கும் எனச் சொல்ல இயலாது’ என்றொரு தொடர். ‘ஈர்ப்பூட்டுகின்றவை’ என்பது தானே சரி? கண்ணோட்டினால் ‘பேசுகிறவை’, ‘விவரிக்கிறவை’ என்றெல்லாம் கண்ணில் பட்டன. நவீன உரைநடையில் இப்படி எழுதும்…
தயவு செய்து தற்கொலை செய்துகொள்
“தயவு செய்து தற்கொலை செய்துகொள்” ப. கணேஷ்வரி, தமிழ் முனைவர் பட்ட ஆய்வாளர், அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி. இதனுள்… காலந்தோறும் இலக்கியங்களின் பாடுபொருள்கள் மீதான பல பரிணாமங்கள் குறித்து ஆய்வுலகம் அறியும். சமூகம் எதைச் சுமக்கிறதோ அது படைப்பாக மிளிர்கிறது. அகம், புறம், இன்பம், துன்பம், அரசன், புலவன், மக்கள் என வாழ்ந்துகொண்டிருந்த மக்கள் குழுமம், தன்னுள் முரண்பட்டு இயங்கியதை வரலாறு பறைசாற்றும். “முரண்பாடு எங்கு வினையாற்றுகிறதோ அங்கு வினை மேம்படும்”…
மெய்கண்டார் காட்டும் அத்துவிதம்
அத்துவிதம்அத்துவிதம் என்பது இரண்டு பொருள்கள் இருந்தும் இரண்டு என்று கூற இயலாதப்படி ஒன்றாவதைக் குறிப்பதாகும். கண்ணால் காணக்கூடியப் பருப்பொருளில் இத்தகைய நிகழ்வு ஏற்படுவதில்லை. இந்நிகழ்வு கண்ணிற்குப் புலப்படாத சூக்குமமாய் அமைந்துள்ள அறிவினுள் ஏற்படுவதாகும்.பேரறிவுடைய இறைவன் உயிர், உலகப் பொருளுடன் வேற்றுமை இல்லாமல் கலந்திருக்கிறான். இவ்வாறு கலந்திருக்கும் நிலையில் இறையும் உயிரும் இரண்டு என்னும் தன்மைத் தோன்றாமல் ஒன்றெனும் தன்மையுடன் இருக்கின்ற நிலையை ‘அத்துவிதம்’ என்பர். ஆதலால் அத்துவிதம் என்பது பொருளால் இரண்டாகவும், கலப்பினால் ஒன்றாகவும் அமைந்திருப்பதைக் குறிப்பதாகும்….
முக்கூடற் பள்ளில் கலகக்குரல்
முக்கூடற் பள்ளில் கலகக்குரல் வை. அருட்செல்வி துணைப் பேராசிரியர்,அரசுக்கல்லூரி மூணாறு தமிழ் இலக்கிய வரலாற்றில் காலந்தோறும் பல இலக்கிய வகைகள் தோன்றியுள்ளன. செவ்வியல் இலக்கியங்கள், அறஇலக்கியங்கள், காப்பியங்கள் என அழியாப் புகழ்பெற்ற இலக்கிய வரலாற்றை உடையது தமிழ் இலக்கியம். அந்த வகையில் சிற்றிலக்கியமும் கருத்தாழம் மிக்க ஓர் இலக்கிய வகையாகும். பாட்டியல் நூல்கள் தொண்ணூற்றாறு வகையான சிற்றிலக்கியங்களைப் பட்டியலிடுகின்றன. இவ்விலக்கிய வகை அமைப்பிலும், பாடுபொருளிலும் புதுமை உடையது. எனவே தான் தொல்காப்பியர் புத்திலக்கிய வகைகளை…
‘பொன்விலங்கு’ நாவல் காட்டும் பணியிடக் கலகங்கள்
‘பொன்விலங்கு’ நாவல் காட்டும் பணியிடக் கலகங்கள் செ.மெல்வின் ராஜா உதவிப் பேராசிரியர்,தமிழ்த்துறை அமெரிக்கன் கல்லூரி, மதுரை-02. முன்னுரை: மனித இனம் தோன்றிய காலம் தொட்டே கலகங்களும் உண்டாகியிருக்கின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் திருவிலியத்தில், உலகம் கடவுளால் தோற்றுவிக்கப்பட்ட போது மனிதரையும் உண்டாக்கி, அவர்கள் பணிபுரிய ஒரு தோட்டத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தாh.; அந்த தோட்டத்தில் கடவுள் புசிக்க வேண்டாம் என்று சொன்ன மரத்தின் கனியை சர்பத்தின் தூண்டுதலால் பெண் உண்டது மட்டுமல்லாமல் தன் கணவனுக்கும் கொடுத்து புசிக்கவைத்து கடவுளின்…
ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது – ஜெயகாந்தன்
ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது – ஜெயகாந்தன் வேப்ப மரத்தடியில் நிற்கும் பசுவின் பின்னங் கால்களைக் கட்டி விட்டு மடியைக் கழுவுவதற்காகப் பக்கத்திலிருந்து தண்ணீர்ச் செம்பை எடுக்கத் திரும்பிய சுப்புக் கோனார்தான் முதலில் அவனைப் பார்த்தான். பார்த்த மாத்திரத்திலேயே கோனாருக்கு அவனை அடையாளம் தெரிந்து விட்டது. அதே சமயம் அவன் மார்புக்குள் ‘திக்’கென்று என்னமோ உடைந்து ஒரு பயமும் உண்டாயிற்று. அடையாளம் தெரிந்ததால் தனக்கு அந்த பயம் உண்டாயிற்றா அல்லது அவனைக் கண்ட மாத்திரத்திலேயே தன்னைக் கவ்விக்…

